கனேடிய உறுப்பினர்களுக்கும் சுமந்திரன், சாணக்கியனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்.

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு சென்று அவர்கள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

அத்துடன் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின் பெயரில், கனடிய நாடாளுமன்றத்திற்கு இவர்கள் சென்றிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

மேலும் இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமாகவும், வடக்கு கிழக்கில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான, சட்ட விரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள், அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவ்வாறு மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.

மேலும் கனேடிய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கு உரிய அழுத்தத்தை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply