அதிவேக நெடுஞ்சாலையில் புதிய முறையில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி.

0

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை LANKA QR முறையினுடாக அறவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய திரவ பண பயன்பாட்டை குறைக்கும் நோக்கிலே குறித்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இந்த கட்டண முறை அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப் படுத்தப் படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கையடக்க தொலைபேசிகளில் குறித்த தொப்பையை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் மூலம் நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply