சுகாதாரத்துறை தொழில்வல்லுநர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பல வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்கள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அத்துடன் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சில பிரச்சனைகளை முன் வைத்தே இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.
மேலும் குறித் தாதியர், இடைநிலை , நிறைவுகான் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.