யாழில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் மரணம்.

0

சிரேஸ்ட ஊடகவியலாளர் ம. வ கானமயில் நாதன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றினார்.

அத்துடன் பெரிஸில் 2013ஆம் ஆண்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவரது இறுதிக்கிரியை நாளை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் கோம்பையன் மயானத்தில் இடம்பெறும்.

மேலும் இவர் தனது 75 வது வயதில் மரணம் அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply