மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

0

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதற்கமைய சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறையினரால் 13 பேருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர் .

மேலும் வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் , மாவீரர் நாளை அனுஷ்டிக்க தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்தனர்.

அவ்வாறு யாரும் சட்டங்களை மீறி செயற்பட்டால் அவர்களை கைது செய்ய முடியும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார் .

Leave a Reply