பாவனைக்கு உதவாத 40,000 கிலோ உருளைக்கிழங்கு விற்பனைக்கு பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்பு.

0

மனித பாவனைக்கு பொருத்தமற்ற அவையில் காணப்பட்ட 40,000 கிலோ கிராமுக்கும் அதிகமாக உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கொள்கலன் தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது .

அத்துடன் இந்த உருளைக்கிழங்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட உருளைக்கிழங்கு தொகையை தாவணிக்கு பயன்படுத்தும் நோக்கில் சேவையாளர்களை கொண்டு பதிவு செய்து சந்தைக்கு விநியோகிக்க தயார் படுத்தப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply