உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் சம்பவத்தின் பயங்கரவாதி சக்ரம் ஹாஷிமின் உதவியாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் காத்தான்குடியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் காத்தான்குடி இலக்கம் 4 பிரிவைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.