கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் கொழும்பு 4,5,6, 7, 8 மற்றும் கோட்டை , கடுவலை மாநகர சபை அதிகார பிரிவு, மஹரகம மற்றும் பொரஸ்கமுவ நகரசபை அதிகாரப்பிரிவு ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகம் தடைப்படும்.



