பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தகவல் வெளியாயுள்ளது.
இதற்கமைய அனைத்து பாடசாலைகளின் சகல வகுப்புகளையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது நிலையில் பாடசாலைகளில் சுத்திகரிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலானது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலைகளின் ஏனைய வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பிலான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளார்.