மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் சீனி இறக்குமதியாளர்கள்.

0

சீனி இறக்குமதியாளர்கள் மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான டொலர் ஒதுக்கம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லையென இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் இதுவரையில் 200 சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாதுள்ளன.

மேலும் சீனியை இறக்குமதி செய்வதற்கு அவசியமான 18 மில்லியன் டொலரை இறக்குமதியாளர்கள் முன்னதாக அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply