காரைநகர் கடற்படை முகாமில் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களையும் யாழ் சிறைச்சாலையில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் தொடர்பாக வழக்கு
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த மீனவர்கள் 23 பேரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



