அதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பு.

0

அதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது .

அத்துடன் இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் அவர் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் அபிவிருத்தி திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த செப்டம்பர் 30 வகை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

குறித்த உடன்படிக்கையில் 51% பங்கு அதானி நிறுவனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply