பாடசாலைக்குச் செல்ல விருப்பமான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லலாம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய சென்னைக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனையை அதிதீவிர சிகிச்சைப் பிரிவு தனியார் மருத்துவமனை ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதற்கமைய குறித்த நிகழ்வு ஊரகத் தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா. மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்துள்ள போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் முதலாம் திகதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் கட்டாயமாக பாடசாலைக்குப் சமூக அளிக்கத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் பாடசாலைக்குச் செல்ல விருப்பமான மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.