பல்கலைக்கழகங்களை திறக்குமாறு கோரிக்கை.

0

அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு வருட காலமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

மேலும் இணைய வழிக் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில நேரங்களில் அது நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply