இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்!

0

இலங்கையில் சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டில் நிலவிய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் பாடசாலைகள் ஆறு மாத காலம் மூடப்பட்டிருந்தது.

இதற்கமைய நாடு பூராகவும் உள்ள 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளே இவ்வாறு இன்று முதல் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல அதிபர்கள் சங்கங்கள் இன்று பாடசாலைக்கு சமூகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர் என்பதுடன் பெருமளவிலான ஆசிரியர்களும் பாடசாலை சமூகம் அளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply