இலங்கையின் பல பகுதிகளிலும் இன்றுஇடியுடன் கூடிய கன மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் காலையில் அல்லது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் மத்திய ,சப்ரகமுவ ,மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மேக மூட்டத்துடனான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply