பிறந்து 2 மாதங்களேயானா ஆண் குழந்தை ஒன்று உயிரிழப்பு.

0

யாழில் பிறந்து 2 மாதங்களேயானா ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த குழந்தை நேற்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் தாய்ப்பால் கொடுத்த பின் சில நிமிடங்களில் மயக்கம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் 2மாத குழந்தை  5.30  மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை வட்டாரங்கள்  தகவல் தெரிவிக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்த குறித்த குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply