உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி.

0

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திலுள்ள 24,000 மாணவர்களுக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசியினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் விவேகானந்தா, தேர்ஸ்டன், விஷாகா, பெனடிக் ஆகிய கல்லூரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply