தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்.
தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம்.
மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள் ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும்.
இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும்.
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது.