யாழ்ப்பாணம், கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் அந்தியேட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு சென்றிருந்த நிலையில் கிரியைகளை முடித்துவிட்டு கீரிமலைக் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளையில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் தட்டாதெருவைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.