இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை.

0

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலு நாளை காலை 8:30 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply