பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் இதோ நெருங்கி வருகின்றது!

0

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கி வருகின்றது என இலங்கை மருத்துவ சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் அதனை மீண்டும் ஆரம்பித்ததற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதலில் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்து, அதன்பின் கட்டம் கட்டமாக எளிய பாடசாலைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உரிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் சிறுவர்களை தெளிவுபடுத்துவது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் கீதால் பெரேரா தெரிவித்துள்ளார்

Leave a Reply