இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு.

0

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு பதிவு 7,921 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய குறித்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் உற்சாகமாக வாக்களித்து வருகின்ற நிலையில்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதற்கான அறிகுறி உள்ளவர்களுக்கும் வாக்களிக்க பிரத்தியேக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply