பெண்கள் உரிமைகள் தொடர்பிலான விசேட உரையாடல்!

0

திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் சுய தொழில் முயற்சியான்மை, பெண்கள் உரிமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (05) மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மஹ்ரூப் றைசா தலைமையில் இடம் பெற்றது.

முள்ளிப்பொத்தானை, 4ம் கட்டை,வெள்ளைமணல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதுடன் இதில் எதிர்காலத்தில் பெண்களின் சுயதொழில் விருத்திகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் மகளிர் அணி தலைவி மஹ்ரூப் ரைசா மற்றும் பெண்கள் அணியினர் என கலந்து கொண்டனர்.

Leave a Reply