பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதைக்கப்பட்ட தடை நீடிப்பு..!

0

பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply