இன்று முதல் ஆரம்பமாகும் நாடாளுமன்ற அமர்வுகள்!

0

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் 8ஆம் திகதி வரை நாடாளுமன்ற இந்த அமர்வுகள் இடம்பெறும்.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகளை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் பிரகாரம் அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்களை இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.

மேலும் நாளைய தினம் நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் என பல கருத்துகள் நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply