இன்று முதல் அதிக அளவிலான அரசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
பயணிகள் எந்தவித நெருக்கடி இன்றி பயணிப்பதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரச சேவைகளுக்காக பயணிப்போரை கருத்திற்கொண்டு அவர்களுக்காக விசேட பேருந்து சேவைகள் சேவையில் ஈடுபடுதப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கையும் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



