நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் 3 மணி நேர வாக்குமூலம்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் 3 மணி நேர வாக்குமூலத்தினை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் அவர் இந்த வாக்குமூலம் வழங்கியதை அடுத்து குறித்த இடத்தில் இருந்து புறப்பட்ட சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்தகால அரசாங்கத்தின் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக பணி ஆற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் தவறான நிதிக் கையாளுகை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்தது.

மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply