நாளை முதல் 25ஆம் திகதி வரை குடி நீர் வினியோகம் நிறுத்தம்!

0

சென்னையில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லி மீட்டர் திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதியில் நாளைய தினம் காலை 6 மணி முதல் 25ஆம் திகதி 10 மணி வரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் இந்த நேரத்தில் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார் , வேளச்சேரி, பெசன்ட் நகர், சோளிங்கநல்லூர், ஈச்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக பகுதி 9 மயிலாப்பூர், மாற்றுவழி பொறியியலாளர் செல்போன் எண் 8144-30909 , பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியியலாளர் செல்போன் எண் 81449-30913 பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியியலாளர் செல்போன் 81449-30914 , பகுதி 15 ஈச்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியியலாளர் செல்போன் எண் 81448-30915 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்ட பயனடையலாம்.

மேலும் குறித்த தகவலை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply