யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்.

0

யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் இளம்பெண் ஒருவரே இவ்வாறு திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 37 வயதினையுடைய நவிண்டில் பகுதியை சேர்ந்த தவேந்திரன் துளசிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் திருமணம் முடித்து மிக விரைவில் கணவரிடம் செல்லவிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply