தமிழக தலைமை செயலாளரினால் வெளியிடப்பட்ட அரசாணை!

0

தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த அரசாணையில் கலை மற்றும் கலாச்சார ஆணையாளர் வி. கலையரசி அவர்கள் பொது மற்றும் மறுவாழ்வு துறையில் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கமைய ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் கலெக்டராக பிரதிக் தயாள், நிதித் துறையின் துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் துணை செயலாளர் எம். பிரதீப் குமார் தமிழ்நாடு குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

சிதம்பரம் உதவி கலெக்டர் எல். மதுபாலன் ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை மற்றும் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கன்னியாகுமாரி மாவட்டம் சப்-கலெக்டர் எம். சிவகுரு பிரபாகரன் சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல துணை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply