வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் முடிவு!

0

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதசனையின் பெறுபேற்றை வழங்க தீர்மானிக்கப்படுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளை வழங்கக் கூடிய வசதிகளை கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை முதல் இதனூடாக பி.சி.ஆர் பரிசோதனைகளின் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பி. சி.ஆர் பரிசோதனை பெறு பேறுகள் கிடைக்கப் பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் மோசடி செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply