மூதுார் தளவைத்தியசாலையில் தாதியர்களினால் முன்னெடுக்கப்பட போராட்டம்.

0

திருகோணமலை -மூதூர் தளவைத்தியசாலையில் இன்று காலை 11: 41 மணியளவில் பதாதைகள் தாங்கிய அமைதிப் போராட்டம் ஒன்று தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் -19 நிலையங்களில் கடமை புரியும் ஊழியர்களின் அடிப்படை தேவைக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடு,
கொவிட் -19 தொற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை வழங்கு,
சுகாதார அமைச்சே கொவிட் -19 தடுப்புச் செயற்திட்டத்திற்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்வாங்கு,
சுகாதார ஊழியர்களுக்கான 7500 ரூபா கொடுப்பனவை தொடர்ந்து வழங்கு,

கொவிட் -19 நிலையங்களில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்கு,
சுகாதார ஊழியர்களுக்கு N-95 Mask பெற்றுத்தா,
N-95 முகக்கவசம் பாதுகாப்பான உடை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கு,
சுகாதார சேவையை மூடிய சேவையாக மாற்று போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

Leave a Reply