பால்மாவின் விலையினை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்!

0

உள்நாட்டு பால்மாவின் விலையினை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவிலையின் அதிகரிப்பிற்கு ஏற்ப உள்நாட்டு பால்மாவில் விலையினையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேனீர் உற்பத்தி செய்வதற்கு பால்மாவை பயன்படுத்துவதை விட பசும்பாலை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபம் என மில்கோ சங்கத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பசும்பாலை உபயோகப்படுத்துவது தற்போது காணப்படும் பால்மா பற்றாக்குறைக்கு தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சந்தையில் பால்மா பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதுடன் பர்மாவின் விலையை அதிகரிப்பதால் தாம் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Leave a Reply