இரு கைக்குண்டுகள் மீட்பு!

0

அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் நேற்று பிற்பகல் குறித்த குப்பை தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் போது நகரசபை பணியாளர் ஒருவரினால் இந்த கைக்குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த கைக்குண்டுகள் குறித்த குப்பை தொட்டியில் எவ்வாறு இடப்பட்டமை என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply