20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி!

0

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது.

அத்துடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மேலும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இதில் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply