திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.