வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரத்தை சுயாதீன குழு கைப்பற்றியுள்ளது!

0

யாழ் வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரத்தை சுயாதீன குழு கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த சில நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராக பதவி விவாதித்த கோனலிங்கம் கருணாநந்தராசா, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதன் பிரகாரம் குறித்த வெற்றிடத்திற்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

17 உள்ள உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகரசபையில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 8 வாக்குகளும், சபாபதிப்பிள்ளை செல்வேந்திரா தலைமையிலான சுயாதீன குழுவுக்கு ஒன்பது வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில் வல்வெட்டித்துறை நகரசபையின் அதிகாரத்தை சுயாதீன குழு கைப்பற்றியுள்ளது.

Leave a Reply