தம்பலகாமம் பகுதியில் மூன்றாவது நாளாகவும் தடுப்பூசி நடவடிக்கை!

0

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பகுதியிலும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் (21)இடம் பெற்றது.

இதற்கமைய 20 வயது தொடக்கம் 29 வயதினை கொண்டவர்களுக்கான சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்.மலர்விழி தலைமையில் இடம் பெற்றது.

தம்பலகாமம் மீரா நகர் அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று (21) இடம் பெற்ற தடுப்பூசி ஏற்றும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்து இத் தடுப்பு மருந்தினை பெற்றுச் சென்றனர்

Leave a Reply