வார இறுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் எடுக்கவுள்ள முடிவு!

0

சில அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வார இறுதியில் உரிய தீர்வு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருள் விலைக்கு ஏற்ப விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் அதற்கான உரிய அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும் உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பிற்கு அமைய பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை சிறிதளவு ஏனும் அதிகரிக்க நேரிடும்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இந்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply