மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு நேர்ந்த கதி!

0

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று நபர்கள் காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் திருகோணமலை – மொரவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட நறுமுகையே வனப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்
போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய உழவு இயந்திரங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply