சகல மொத்த விற்பனை வர்த்தக நிலையங்களும் திறப்பு!

0

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் தம்புள்ளை நகரின் சகல மொத்த விற்பனை வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த வர்த்தக நிலையங்களை இன்று முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த தீர்மானத்தை பிரதேச கொவிட் 19 செயலணி தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தினம் தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply