தபால் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

0

நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டுதபால் நிலையங்கள் திறக்கப்படும் தினங்களை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தபால் நிலையங்களை வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறித்த தபால் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தபால் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருபவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வருகை தந்து உரிய தபால் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தபால் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply