உத்தர பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி!

0

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கமைய அங்கு ஆளும் கட்சியாக உள்ள பா. ஜனதா ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைஸி ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு சென்று அலிகாரில் உள்ள மகேந்திரசிங் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.

பின்னர் இதனை தொடர்ந்து அரசியல் கட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரதமரின் பயணம் உத்தரபிரதேச பா. ஜனதாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply