ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பண உதவி வழங்கிய மூவர் அதிரடியாக கைது!

0

மக்களுக்கு பண உதவி வழங்கிய மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி யாழில் அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய மூவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில் இடம்பெற்றது.

இந்நிலையில் இந்த பண உதவி வருமானமும் இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் .பல நூற்றுக்கணக்கானோர் அங்கு வரிசையில் திரண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நெல்லியடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு பணம் உதவி வழங்கிய மூவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply