இலங்கைக்கு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தாய்லாந்தினால் சில மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய 30 பிராணவாயு செறிவூட்டிகள், இரண்டு வெண்டிலேட்டர்கள், 108 பிராணவாயு தாங்கிகள் மற்றும் 160 ஓக்சி மீட்டர்கள் போன்ற உபகரணங்களே இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் – ஸ்ரீலங்கா வர்த்தக சபை மற்றும் கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் என்பன இணைந்து குறித்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.