மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசேட ஆயம் நியமனம்!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசேட ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த ஆயம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழுவின் தலைவராக மேல் நீதிமன்ற நீதிபதியாக தமித் தொடவத்த பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த விசேட ஆயத்தில் ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மெளவிககள் உள்ளிட்ட 25 பிரதிவாதி களுக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply