ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவர்!

0

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றுவதோடு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்த தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலை காரணத்தால் நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் காரணத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றுவர் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply