மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட உயிரிழந்த சிறுமியின் சரீரம்.

0

ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் தொழில் புரிந்து வந்த நிலையில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சரீரம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சற்று முன்னர் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

இந்நிலையில் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட குறித்த சிறுமியின் சடலம் மீள் பிரேத பரிசோதனையை மேற் கொள்வதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது,

மேலும் இந்த சிறுமியின் சடலம் மீள் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்படுள்ள மூன்று பேர் அடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply