கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 15 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட் தொற்று உறுதி!

0

நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் யாழ் புங்குடுதீவு பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 15 கர்ப்பிணித் தாய்மாருக்கு குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இவ்வாறு தொற்றுறுதியான அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் குறித்த தாய்மார்கள் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply